Question
Download Solution PDFபரிதிமாற் கலைஞரின் இயற்பெயர் யாது?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான விடை: சூரிய நாராயண சாஸ்திரி.
Key Points
- இயற்பெயர் - வி.கோ.சூரிய நாராயண சாஸ்த்திரியார்
- ஊர் - மதுரையை அடுத்துள்ள விளாச்சேரி
- சிறப்புப் பெயர்கள் - தமிழ் நாடக பேராசிரியர், திராவிட சாஸ்திரி, தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்.
- இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், நாடகவியல், சூர்பநகை.
- இவர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார்.
- இவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் பணி வழங்க முன்வந்தது. ஆனால் அதனை இவர் நிராகரித்து விட்டார்.
- இவருக்கு திராவிட சாஸ்திரி பட்டம் வழங்கியவர் யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் ஆவார்.
- இவர் எழுதிய தனிப்பாசுரத் தொகை என்ற நூலில் தன் பெயரை பரிதிமாற் கலைஞர் என தனித்தமிழ் படுத்தினார்.
- தமிழ்ச் சொற்களோடு வடமொழிச் சொற்கள் கலந்து பேசுவதை இவர் "மணியோடு மிளகாய்ப்பழம் கலந்தது போன்றது" என்று கூறினார்.
Additional Information
ஞானத் தச்சன் - தஞ்சை வேதநாயக சாஸ்திரி
- வேதநாயக சாஸ்திரி தஞ்சையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் ஆவார்.
- இவர் திருநெல்வேலியில் 1774இல் பிறந்தார்.
- இவர் தமிழில் பல உரைநடைத் துண்டுப் பிரசுரங்களையும் எழுதினார்.
- இவரது முக்கியப் படைப்புகள் கவிதை, இலக்கியம் மற்றும் இசை வகைகளில் இருந்தன.
கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி:
- பிறந்த ஊர்: கல்லிடைக்குறிச்சி
- கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி தமிழகத்தின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆய்வு அறிஞர் ஆவார்.
- கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தமிழைவிட ஆங்கிலத்தில் தான் தனது கருத்துக்களை அதிகமாக பதிவிட்டுள்ளார்.
- ஆர். எஸ். சர்மா, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் அல்லர் என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரப்பூர்வமானது என்றும் கூறியுள்ளார்.
- பேராசிரியர் வேங்கடாசலபதி அவர்கள் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியை 20 ஆம் நூற்றாண்டு தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்று எழுத்தாளர் எனக் கூறியுள்ளார்.
- இவர் 1957 இல் பத்ம பூஷண் விருது பெற்றவர்.
- இயற்றிய நூல்கள்: சோழர்கள், தென்னிந்தியா வரலாறு, தமிழர் வரலாறும் பண்பாடும், தென்னிந்தியாவைப் பற்றிய வெளிநாட்டினர் குறிப்புகள்
Last updated on May 13, 2025
->TNUSRB SI Application Correction window link is active now candidates can make corrections in their application forms if they want.
->TNUSRB SI Application Deadline has been extended. The last date to apply online for the vacancy is 10th May 2025.
-> The TNUSRB SI Notification 2025 was released on 4th April 2025.
-> A total of 1299 vacancies have been released.
-> Candidates can apply online from 7th April to 3rd May 2025.
-> The TNUSRB SI Notification has been released for the recruitment of Sub-Inspectors of Police for Taluk and Armed Forces in the Tamil Nadu Police Department.
-> The selection process includes a written test, PMT, PET, endurance test, medical examination, and certificate verification. Refer to the TNUSRB SI Previous Year Papers to prepare well for the exam.